15 வயது சிறுமியை கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய 16 வயது சிறுவன்


கண்டியிலிருந்து கடத்திச் சென்ற 15 வயது சிறுமியை வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் வைத்து 16 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி ஒருவர் கண்டி பொலிஸ் பெண்கள் பாதுகாப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

கண்டி அகஸ்ட்டாவத்த என்ற இடத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார். தற்போது இச்சிறுமி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

15 வயது சிறுமியான என்னை கடந்த 25ஆம் திகதி 16 வயது சிறுவன் ஆசைவார்த்தைக் காட்டி கடத்திச்சென்று வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் வீடொன்றில் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாகவும் தான் இந்நிலையில் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சந்தேக நபரான 16 வயதுச் சிறுவனை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் கடுமைக்கு மத்தியில் இலங்கைத் தமிழர்கள் சளைக்கவில்லை


அவுஸ்திரேலியாவின் கடுமையான சட்டங்களுக்கு மத்தியிலும் இலங்கை தமிழ் அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்தான படகுகள் மூலம் செல்வதாக இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்குள் 6000 சட்டவிரோத அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

இந்த பயணங்களின்போது பலர் உயிரிழக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியிலும் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்ல காலநிலை இயல்பாக இருக்குமானால் சுமார் 20 நாட்கள் வரை செல்கின்றன. இதன்போது பலர் உயிரிழந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என்பதை இந்திய இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாம் இணைப்பு-

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் உதவியுடன் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க வேண்டாமென வலியுறுத்து

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் உதவியுடன் அவுஸ்திரேலியாவிற்குள் அத்துமீறி பிரவேசிக்க முயற்சிக்க வேண்டாம் என்று, அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் வலியுறுத்தல் விடுத்துள்ளது.

சென்னையில் உள்ள அவுஸ்திரேலியாவின் பிரதி தூதுவர் டேவிட் ஹோலி இதனைத் தெரிவித்துள்ளார். சட்ட விரோதமானமுறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு விசேட சலுகைகள் எவையும் வழங்கப்படமாட்டாது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுகின்ற சிலர் மாத்திரமே மனூஸ் மற்றும் நவுரு தீவுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

எனினும் அவ்வாறு மனூஸ் மற்றம் நவுரு தீவுகளுக்கு அனுப்பப்படுகின்றவர்கள் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பத்த 5 வருடங்களின் பின்னரே, அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தல் காரர்களின் உதவியுடன் அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள், அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இருந்து எந்த சலுகையையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளா

வவுனியாவில் 13 வயது பாடசாலை மாணவி அவரது அக்காவின் கணவரால் பாலியல் பலாத்காரம்


வவுனியாவில் 13 வயது பாடசாலை மாணவியொருவர் அவரது அக்காவின் கணவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வவுனியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி யோ.ஜெயக்கெனடி தெரிவித்துள்ளார்.

வவுனியா, சாந்தசோலை கிராமத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி, அவருடைய சகோதரியின் கணவரால் பல நாட்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.

எனினும், குறித்த சிறுமியை பாதுகாக்கவோ, அவருக்கு உதவவோ எவரும் முன்வரவில்லை.  இந்நிலையில் சிறுமி அக்கிராம மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவரிடம் நேற்று முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து, அக்கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தால் வவுனியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாக யோ.ஜெயக்கெனடி குறிப்பிட்டார்.

அதன் பின்னர், அக் கிராமத்திற்கு சென்று சிறுமியை அழைத்துச் சென்று வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் வவுனியா பொலிஸ் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீக்குளித்த பௌத்த பிக்கு ஒரு போக்கிரி!- ஆங்கில இணையத்தளம்


கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து இறந்துபோன போவத்த இந்திரட்ண தேரர் என்ற பௌத்த பிக்கு தற்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் அவர் ஒரு புனிதராக பௌத்தர்களால் காட்டப்பட்டாலும் அவர் அடிப்படையில் ஒரு போக்கிரி என ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

குறித்த பௌத்த பிக்கு ஜோன் செனவிரத்ன மின்சார எரிசக்தி அமைச்சராக இருந்த காலப் பகுதியில் குறித்த அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் 20லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டியிருக்கின்றார்.

மேலும் ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 10லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டியிருக்கின்றார். இவற்றுக்கு எதிராக அமைச்சர் ஜோன் செனவிரத்ன பொலிஸில் முறைப்பாடு கொடுத்திருந்த போதும் குறித்த பௌத்த பிக்கு கைது செய்யப்படவில்லை.

2012ம் ஆண்டு வீரகெட்டிய என்ற ஊரில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீதும், அதே ஊரில் 2013ம் ஆண்டு பள்ளி வாசல் மீதும் தாக்குதல் மேற்கொண்டிருந்தவரும் இவரே.

குறித்த பிக்கு இறப்பதற்கு 3 தினங்களுக்கு முன்னதாக நீதிமன்றினால் பிடிவிறாந்தும் இவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த பிக்கு தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகிறது.

குறித்த தற்கொலைச் சம்பவத்தின் பின்னர் பிக்குவை ஒரு புனிதராக காட்டும் முனைப்புக்கள் நடைபெறுகின்றது.

இவற்றுக்கு மேல் குறித்த பிக்கு தீ மூட்டி கொழுத்தப்பட்டார் எனவும் அவர் தானாக தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் குறித்த இணையத்தளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அதில் வெள்ளை நிற சேட் மற்றும் காற்சட்டை அணிந்துவரும் நபர், பிக்குவிற்கு தீ மூட்டுவது தெளிவாக தெரிகின்றமை இங்கு விசேடமாக குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது.

மேலும் குறித்த பிக்கு தம்புள்ள பள்ளிவாசலுக்கு எதிராக அடாவடித்தனம் புரிந்தபோது அதனை தடுத்த இராணுவத்தினருக்கு தனது ஆடையை கழற்றி கூச்சல் போட்டவரும் இவரே. இவரையே சிங்கள பௌத்த இனவாதிகள் புனிதராக காட்ட முற்படுகின்றனர்.

தரணியெங்கும் தமிழ்


பர்மாவில் உள்ள அராகன் மலையில் இருந்து தெற்கு நோக்கிச் சுமத்திரா தீவுவரை நீண்ட நெடிய மலைத்தொடரின் தொடர்ச்சி கடலில் மூழ்கிப் போனது. எஞ்சிய சிகரங்களே இன்றைய அந்தமான் – நிக்கோபார் தீவுகள் ஆகும். சிறிதும் பெரிதுமாக 567 தீவுகள் இன்றும் உள்ளன. இந்தியாவின் தென்கோடி முனை குமரியல்ல; இந்தியாவிற்குத் தூரக் கிழக்கில், நிக்கோபார்த் தீவுக்கும் தெற்கே உள்ளது. இப்பகுதி நிலநடுக்கோட்டிற்கு வடக்கே உள்ளது. இதன் பெயர்பிக்மலியன் பாயின்ட் இது அண்மையில் ‘இந்திரா முனை’ என நடுவணரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அந்தமானின் தலைநகர் போர்ட் பிளையர், சென்னையிலிருந்து 1191 கடல் மைல் தூரத்திலும், கல்கத்தாவிலிருந்து 1255 கடல் மைல் தூரத்திலும் இருக்கின்றது. 1945 இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட அந்தமான் முதலிய தீவுகள் 1-11-1956 முதல் நடுவணரசின் நேரடி மாநிலமாயின.

தமிழர் குடியேறிய வரலாறு
தீவுமக்களும் தமிழரும் :
அந்தமான் தீவில் ஆப்ரிக்கரைப் போன்ற கருப்பு நில பழங்குடிகள் வாழ்கின்றனர். இம்மக்கள் ‘நீக்ரிடோ’ இனத்தவர். இவர்களின் ஊர்ப் பெயர், பழக்க வழக்கங்கள், பயன்படுத்தும் பொருள், மொழியின் வேர்ச்சொல் ஆகியவை தமிழோடு ஒத்துப் போகின்றன. இவர்களைப் போலவே நிகோபார் தீவுகளில் மங்கோலியன் கலப்பு இன மஞ்சள் நிறப் பழங்குடியினராக நிகோபாரிகள் வாழ்கின்றனர். நிகோபாரி மொழியில் தமிழைப் போல் ‘ழ’ கரம் பயன்படுத்தப்
படுவதோடு, குடுமி வளர்த்தல் மற்றும் மங்கோலியரோடு ஒத்துப் போகாத தமிழரோடு இணைந்த குடும்ப வாழ்க்கையும், பழக்க வழக்கங்களும் உண்டு.

பெரிய நிகோபாரில் உள்ள ‘சாம்பன்’ பழங்குடியினரைப் பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் இப்படி எழுதியுள்ளார். “இந்த இன மக்கள் வாழும் காட்டுப் பகுதியில் ஒரு தமிழனைச் சந்தித்தால் ‘சாம்பன்’ பழங்குடியினரில் இருந்து என்னால் வேறு படுத்திக் காண முடியாது”
என்கிறார். இந்த அடிப்படையில் பழங்காலந்தொட்டே தமிழனுக்கு அந்தமானோடு தொடர்பு இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.

‘அந்தமான்’ என்ற பெயரே தமிழர் கொடுத்ததுதான். மான்கள் நிறைந்திருந்த காரணத்தால் இப்பெயரால் அழைத்தனர். சோழர்களின் ஆட்சியில் தென்கிழக்காசியா முழுவதும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது வரலாறு. சோழனின் கடற்படை இன்றைய நிக்கோபாரில் இருந்ததாம். இதற்கான ஆதாரத்தை தஞ்சைக் கோயில் கல்வெட்டில் இன்றும் காணலாம். நிக்கோபாருக்குத் தமிழர்கள் வைத்தபெயர் : ‘நக்கவரம்’ என்பது. அக்காலத்தில் அத்தீவில் இருந்த மக்கள் நிர்வாணமாக இருந்ததால் இப்பெயர் வைக்கப்பட்டது என்கின்றனர்.

கார் நிகோபாரை ‘கார்தீவிபா’ என்றும் கிரேட் நிகோபாரை ‘நாகதீவிபா’ என்றும் சோழர்கால சமஸ்கிருத கல்வெட்டு கூறுகிறது. மார்கோபோலோ வரவால் இத்தீவின் பெயர் ‘நெக்குவரம்’ என்று மாறிவிட்டது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’யில் வரும் சாதுவன் என்ற வணிகன் இத்தீவில் தான் மாட்டிக்கொண்டான் என்கின்றனர். ‘நக்க சாரணர் நாகர்வாழ்மலை’ என்று குறிப்பிடும் பகுதி இஃதே எனச் சொல்லலாம்.

இரண்டாம் கட்ட குடியேற்றம் :

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இத்தீவின் முக்கியத்துவத்தை உணர்ந்து படைகளை நிறுத்தி இருந்தனர். பின்னர் அரசியல் கைதிகளை வாழ்நாள் தண்டணை தந்து இங்கு குடியேற்றினர்.
சிறைச்சாலைக் கட்ட சென்னையிலிருந்து பல தமிழர் குடியேறினர். அரசியல் கைதிகளைத் தவிர மற்ற குற்றவாளிகளும் குடியேறினர்.

அரசியல் கைதிக்கு அடுத்து, வணிகர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் தமிழர்கள் பெருமளவில் குடியேறினர். அரசியல் கைதிகளில் வங்காளிகளும், மாப்பிளா கலகத்தின்
போது போராடிய 1400 மலையாளிகளும் பெருமளவில் குடியேறியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 1971-ஆம் ஆண்டு மொழிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வங்காளிகள் முதலிடம், தமிழர் இரண்டாம் இடம். இன்று 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

567 தீவுக் கூட்டத்தில் இதுவரை மக்கள் குடியேறியிருப்பவை 38 மட்டுமே. மற்றவை அனைத்தும் மனிதவாசனை அற்ற தீவுகளே ஆகும். 1943-இல் ஜப்பானியர் இந்தத் தீவுகளை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றி 1945 வரை மூன்றாண்டுகள் வைத்திருந்தனர். பின்னர் இத்தீவை நேதாஜி சுபாஷ் சந்திர போசிடம் விட்டனர். இந்தியாவின் முதல் சுதந்திரப் பிரகடனமும், மூவண்ணக் கொடியும் இங்கேதான் ஏற்றப்பட்டது. முதல் ஆளுனராக நேதாஜியால் நியமிக்கப்பட்டவர் டாக்டர். கர்னல் லோகநாதன் என்ற தமிழர் ஆவார்.

தமிழரின் இன்றைய நிலை

சமயம் :

ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் செல்வாக்கே எங்கும் இருந்தது. அவர்களின் தலைமையிடமாக ‘ராஸ்’ என்ற சின்னஞ் சிறியத் தீவு விளங்கியது. இங்குதான் கிருஸ்த்துவ தேவாலயம் இருந்தது. அது தவிர்த்து அனுமதிக்கப்பட்ட ஒரே கோவில் தமிழர்கள் கட்டிய முருகன் கோயில்தான்!

தலைநகர் போர்ட் பிளையரின் வெற்றிமலை முருகன் கோயிலை இங்குள்ள மக்கள் அந்தமானின் திருப்பதி என்கிறார்கள். இதே போல போற்றப்படும் மற்றொரு கோயில் அலைகடல் அய்யனார் கோயிலாகும். தீவெங்கும் முருகன், வினாயகர், மாரியம்மன்
ஆலயங்களைக் கட்டி, அவை தொடர்பான விழாக்களை நடத்தி, தமிழர் பண்பாட்டினைக் காப்பாற்றுகின்றனர். காதணிவிழா, திருமணம் போன்றவை இக்கோயில்களில் நடப்பதுண்டு. இங்கு விழாக்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தாம் நடத்தப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம் முதலியவை முக்கிய விழாக்களாகும்.

உணவு :

வங்காளிகள் அதிகம் என்பதால் இனிப்பு வகைகள் சந்தைகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. தமிழர்களின் மரபான இட்லி, தோசை, வடைக்கும் மக்களிடம் பேராதரவு உண்டு.

உடை :

பேண்ட்-சட்டைகளையே எல்லோரும் அணிகின்றனர். இதுவே தேசிய உடையாகக் காணப்படுகிறது. பெண்கள் சேலை, ஜாக்கெட், பாவாடைகள் அணிகின்றனர்.

பிறபழக்கவழக்கங்கள் :

பெண்கள் தலையில் பூச்சூடுவதும், நெற்றியில் திருநீறும், குங்குமமும் இடுவதிலிருந்தும் தமிழர் என்பதை இனம் காணலாம். நாள்தோறும் சாணிதெளித்து கோலமிடும் வழக்கத்தைத் தமிழர் இங்கு விட்டுவிட்டனர்.

ஊர் பெயர் :

தமிழர்கள் வாழும் ஊர்களுக்கு வள்ளுவர்நகர், இராமச்சந்திரபுரம், புதுமதுரை எனப்பெயரிட்டுள்ளனர்.

தகவல்தொடர்பு சாதனங்கள் :

‘அந்தமான் முரசு’ என்கிற இதழ் 18 ஆண்டுகளாக வெளிவருகிறது. இதன் ஆசிரியர் சுப. சுப்பிரமணியன் ஆவார். இன்று வேறு எட்டு கிழமை இதழ்கள் வெளிவருகின்றன. இவற்றுள் சில கட்சி இதழ்கள் என்றாலும் பிறமொழிகளில் இந்தளவு இதழ்கள் ஏதும் வெளி வரவில்லை. வேறு மொழியினர் கணிசமான அளவு வாழ்ந்தாலும் யாரும் தமது தாய்மொழியில் இதழ்கள் வெளியிடமுன் வருவதில்லை. அதே நேரத்தில் தமிழில் மட்டும் இத்தனை இதழ்கள் எப்படி வெளி வருகின்றன என மற்றவர்கள் வியப்படைகிறார்கள்.
அந்தமானிலுள்ள 12 அச்சகங்களில் பத்து அச்சகங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மொழி தமிழ் மட்டுமே. இங்கே பத்திரிக்கைகள் 10 நாளைக்கொருமுறை கப்பல் மூலமும் வாரத்தில் மூன்று நாள் விமானத்தின் மூலமும் வருகின்றன. தமிழகத்திலிருந்து வெளிவரும்
இதழ்கள் அனைத்தும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும்.

திரைப்படங்கள் :

தமிழகத்திலிருந்து வரும் திரைப்படங்கள் தீவில் உள்ள 4 திரை அரங்குகளிலும் திரையிடப்படுகின்றன. இங்கு ரசிகர் மன்றங்களும் உண்டு.

தமிழ் மொழியின் நிலை

அந்தமானில் – வங்காளியர், பஞ்சாபியர், தமிழர், மலையாளிகள், தெலுங்கர் போன்ற பல மொழிபேசும் மக்கள் இருந்தாலும் ‘இந்தி’யே ஆட்சிமொழியாக இருக்கிறது. அந்தமான் தமிழர்பற்றி இதுவரை முழுமையான நூல் ஒன்று கூட வெளிவரவில்லை.

கல்வி :

தீவின் மொத்த மக்களில் இரண்டாம் இடத்தில் தமிழர்கள் இருந்தாலும் ‘தமிழ்க்கல்வி’ தருவதில் மத்திய அரசு தயக்கமே காட்டி வந்தது. தமிழர்களுக்குத் தமிழ்க்கல்வி கொடுக்காமல் இந்திபேசும் இந்தியர்களாக ஆக்கிவிட வேண்டும் என்பதே அப்போதைய நிலை.
தமிழ்க் கல்விப் பிரச்சினைப் பற்றி அந்தமான் தலைமைக் கமிஷனராக அப்போதிருந்த ஹர்மந்தர்சிங் சொல்கிறார் :
“இந்தி, உர்து, ஆங்கிலம் ஆகிய மொழிகளே உயர்நிலைப் பள்ளியில் போதனா மொழிகளாக இருந்தன. வங்காளிகள் நெருக்குதல் கொடுத்தார்கள்.

பிறகு அதுவும் போதனா மொழியாக்கப்பட்டது. இப்போது தமிழ்மொழி மீடியம் வேண்டும் என்று நெருக்குதல் தர ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஓர் இருவழிப்பிரச்சினை. இந்தப் பிரச்சினையைக் கிளப்புவோர் உள்ளூர்த் தமிழர்கள் அல்லர். அவர்கள் இந்திமொழியைச் சிரமமின்றி ஏற்றுக் கொண்டவர்கள். இந்திப்படிப்பவர்கள். மெயின்லாண்டுக்குப் போக வர இருப்பவர்கள்தான் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்” என்று மொழிந்திருப்பதிலிருந்து அன்றையப் போக்கை உணர்ந்து கொள்ளலாம்.

அந்தமான்-நிக்கோபார் கல்வித் துறையின் மதிப்பீட்டின்படி ஆறாயிரம் தமிழ்க் குழந்தைகள் மும்மொழித் திட்ட ரீதியில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 33 பள்ளிகளில் கல்வி
பயின்று வருகிறார்கள். இங்கே மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை முடித்த பலர் உயர்க்கல்வி பயில தமிழகத்தையே எதிர்நோக்க வேண்டியுள்ளது. தமிழில் கல்லூரிக்கல்வியோ, பல்கலைக்கழக வசதியோ அந்தமானில் இல்லை.

அமைப்புக்கள் :

1. அந்தமான் தமிழர் சங்கம் போர்ட் பிளேயர்
2. தமிழர் சங்கம், மாயா பந்தர், டிக்லிபூர், லிட்டில் அந்தமான்
3. தமிழ்க் கல்விப் பாதுகாப்புக்குழு, போர்ட் பிளேயர்
4. அநிகார் தமிழ் எழுத்தாளர் பேரவை, போர்ட் பிளேயர்
5. கலை இலக்கிய மன்றம், விவேகானந்தபுரம்
6. தமிழ் இலக்கிய மன்றம், போர்ட் பிளேயர்
7. முத்தமிழ் இலக்கிய மன்றம், இரங்கத்

அந்தமான் தமிழர் சங்கம், தமிழ் இலக்கிய மன்றம் போன்ற அமைப்புகள் தமிழர்களின் இலக்கியப் பசியைக் களைவதில் பெரும் பங்காற்றி வருகின்றன. இதே போல ரெங்கத், மாயாபந்தர், டிக்லிட்பூர், கேமல் பே, கச்சால், வெம்பாலிர்கஞ் போன்ற இடங்களில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இனரீதியான மக்களை ஒருங்கிணைக்கவும் தமிழ் கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் பணியாற்றுகின்றன.

தமிழ் இலக்கிய விழாக்கள் நடத்துவதில் தமிழ் இலக்கிய மன்றத்தின் பணி குறிப்பிடத்தக்கதாகும். பாரதி-பாரதிதாசன் விழா, தமிழ்ப்புத்தாண்டு, முத்தமிழ்விழா, புலவர் விழா, சிலப்பதிகார விழா எனப் பல விழாக்களை அது நடத்தி வழிகாட்டியுள்ளது. இவ்விழாக்களில் குன்றக்குடி அடிகளார், பாவலர் பெருஞ்சித்திரனார், க.ப. அறவாணன், அவ்வை நடராசன், பேராசிரியர் தமிழ்க்குடிமகன், பேராசிரியர் வளனரசு, டாக்டர். ந. சஞ்žவி போன்றோர் பங்கெடுத்துக் கொண்டு தீவு மக்களுக்கு இலக்கியச் சமய விருந்தளித்திருக்கிறார்கள்.

தமிழர் சாதனைகள்

இரண்டு தீக்குச்சி தயாரிக்கும் மர ஆலைகளைத் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். 4 திரையரங்குகளில் 2 தமிழர்களுடையது. இது தவிர வர்த்தக சங்கத் தலைவராக கந்தசாமி இருந்துள்ளார். இவரின் தந்தை கன்னியப்ப முதலியார் 1920-இல் மிடில் அந்தமானில் வியாபாரத்தைத் தொடங்கி இருக்கிறார். கந்தசாமி ‘லாங் ஜலண்டில்’ அண்ணாவுக்குச் சிலை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர். கே.ஆர். கணேஷ் அந்தமான் எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். க. கந்தசாமி இன்று மக்கள் கட்சி தலைவராகவும், பிரதேசக்கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார். பெரும் வணிகராக லிங்கவேல் இருக்கிறார்.

“தீவின் 44 ஊராட்சி மன்றங்களில் ஒரு தமிழர் மட்டுமே தலைவராக இருக்கிறார். போர்ட் பிளேயர் நகராட்சியில் 11 உறுப்பினர்களில் தமிழர் மூவர். ஒருவர் நியமன உறுப்பினர். இதுபோல முப்பதுபேர் கொண்ட பரிந்துரை மன்றத்தில் ஒரே ஒரு தமிழர் மட்டுமே உறுப்பினராகவும் பரிந்துரைஞராகவும் இருக்கிறார்” என்று சுப. சுப்பிரமணியம் 94-ம் ஆண்டு நிலவரத்தை விளக்குகிறார்.

94-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலவரத்தை பத்திரிக்கையாளர் முகவை முத்து விளக்குகிறார்: இப்போதைய நிலைப்படி போர்ட் பிளேயர் நகராட்சித் தலைவர் தமிழர். அமைச்சர் அந்தஸ்தில்
அதுகூட முதலமைச்சர் அந்தஸ்தில் தமிழர். மிகப்பெரிய அதிகாரிகளாக-மாவட்ட ஆட்சித் தலைவராகக் கூட தமிழர்.

பத்திரிக்கை ஆசிரியராக – ஆளுங்கட்சிக்காரராக தமிழர். பெரிய பெரிய வணிகராக தொழிலதிபராக தமிழர். சற்றேறக் குறைய தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இங்கே உண்டு. அந்தமான் தீவில் முதன்முதலாக கட்சிக் கொடிகட்டி அரசியல் கூட்டம் போட்டவன் தமிழன்தான். முதன் முதலாகப் போராட்ட நடத்தியவன் தமிழன் தான். முதல் துப்பாக்கிச் சூட்டுக்கு மூன்று பே உயிரை தியாகம் செய்தவனும் தமிழன். சரித்திரப் பிரசித்திப் பெற்ற செல்லுலார் சிறைச் சாலையில் (சுதந்திர இந்தியாவில்) முத முதல் சிறைவாசம் அனுபவித்த அரசியல் கைதி தமிழன்” என்கிறார்.

வணிகம்/தொழில் புரிவோர் விவரங்கள் :

தீவில் முன்பு குடியேறியவர்கள் அரசு ஊழியம் தேடிக் கொண்டவர்கள். இப்போதெல்லாம் பெரும்பாலும் தனியார் துறையில் தினக் கூலிகளாகவே பணியாற்றுகின்றனர். ஆனால் நல்ல ஊதியம் கிடைக்கிறது. 1970க்கு முன் தீவின் முக்கிய பொறுப்புக்களான வனத்துறை, கப்பல் போக்குவரத்து, காவல்துறை, நீதித்துறை, டாக்டர்கள் என பல பெரிய பொறுப்புகளைத் தமிழர்கள் வகித்தனர். இன்று எல்லா இடங்களிலும் வங்காளிகளும், வடஇந்தியருமே உள்ளனர். இருந்தபோதிலும் தீவின் பெரியதும் சிறியதுமான ஐம்பது விழுக்காட்டு வணிகத்தை தமிழர்களே செய்து வருவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே இருக்கிறது.

தமிழர்படும் இன்னல்கள் :

தமிழர்கள் தென் அந்தமானிலும், போர்ட் பிளையரிலும் பெருந்தொகையில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழரின் தொகையைச் சிதரடிப்பதற்கும் பெரும் முயற்சி நடந்து வருகிறது. கிழக்கு வங்கப் பிரிவினைக்குப் பின்னர் வங்காளிகளின் கள்ளக் குடியேற்றம் நடந்து வருகிறது. பர்மா, இலங்கைத் தமிழர்களை அந்தமானில் குடியேற்றுங்கள் என்றால் வட இந்தியர் ஒப்புவதில்லை. 567 தீவுகளில் 38-இல் மட்டுமே மக்கள் குடியேறியுள்ளனர். மற்றவை காடாகவே இருக்கின்றன. மெல்ல, மெல்ல வங்காளியர் தொகை மட்டும் கூடிக்கொண்டே போகிறது.

தெற்கு அந்தமானில் தமிழர்களின் வீடுகளையும், விளை நிலங்களையும் வங்காளியர் சூறையாடி வருகின்றனர். சூறாவளிப்புயல் மழையில் தமிழர்களின் குடியிறுப்புக்கள் நாசம் செய்யப்பட்டன. மீண்டும் தீவு ஆட்சியாளரிடம் வீடுகட்ட இடம் கேட்டபோது அவர் சொன்னபதில்:
“உங்களுக்கு வீடுகட்ட இடம் வேண்டுமானால் கருணாநிதியிடம், எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்” என்று அன்றைய தீவின் துணை ஆளுனரே பேசியதாகக் கூறப்படுகிறது. ஆளுனரின் நிலையே இது வென்றால் மற்ற பொதுமக்கள் எப்படி இருப்பார்கள்?

தமிழரை இந்திக்காரன் ‘ஐயாலோக்’ (ஐயா என்று சொல்பவர்); ‘கட்டாபானிவாலா’ (ரசம் குடிப்பவன்) என்றும் ‘ஹே ராவன்’ என்றுதான் அழைப்பார்கள். இதுதான் வட இந்தியரின் மன நிலையாக இருக்கிறது.

– ப. திருநாவுக்கரசு

கட்டுரைக்கான ஆதார நூல்கள் :

1. அந்தமான் தீவில் தமிழர் நிலை – முகவை. முத்து.
2. உலகத் தமிழர் – பாகம் 2. இர.ந. வீரப்பன்.
3. பாரெல்லாம் பரந்த தமிழர் – சுப. சுப்பிரமணியம்.
4. இந்தியாவின் ஹவாய் – ஆனந்தவிகடன் 1974.

மேலும் அறிய அந்தமான் தமிழரின் வலைப்பதிவு
http://andamantamizhosai.blogspot.co.uk/2009/12/blog-post.html
(க.நா.சாந்தி லெட்சுமணன்.
போர்ட் பிளேயர், அந்தமான்)
http://andamantamilnenjan.wordpress.com/tag/யானை/
அந்தமான் தீவுகளில் வாழும் தமிழர் தொடர்பான பதிவுகள் பல
http://muelangovan.blogspot.co.uk/2009/11/blog-post_2474.html
http://nermai-endrum.blogspot.co.uk/2012/07/blog-post_9940.html
http://www.tamilkalanjiyam.com/tamil_world/countries/anthaman.html#.UaVSDrXvuss
http://www.viduthalai.in/component/content/article/97-essay/43260-andaman.html
http://temple.dinamalar.com/news_detail.php?id=10158
http://tamil.oneindia.in/art-culture/essays/2009/1108minister-nepoleon-unveils-valluvar.html
http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=8889%3A2011-04-11-09-08-09&catid=49%3A2010-03-25-20-34-00&Itemid=71
http://tamilwin.easyms.com/show-RUnwzBSVmGKbf.html
http://www.tamizl.com/?p=12604
http://semmozhithamizhinam.blogspot.co.uk/2012/09/blog-post_4801.html
http://www.sikams.com/special-news/29776-malaysia-tamilarkal.html
http://www.philosophyprabhakaran.com/2013/02/blog-post_15.html
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=99712
http://tsivasri.blogspot.co.uk/2010/01/blog-post_1050.html
http://a.dinakaran.com/Video_Index.asp?idv=853&cat=49
http://nagapattinam.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=171414
http://www.yarl.com/forum3/index.php?showtopic=114183
http://siragu.com/?p=7902
http://arivumathi.wordpress.com/2008/05/26/p9/
https://earimalai.wordpress.com/2013/05/05/சாத்தம்-ஆலை-அந்தமான்-தீ/

இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதே மீண்டும் மீண்டும் வைக்கும் கோரிக்கை: கலைஞர்


திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுமதிப்பதில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி கூறியிருப்பது, மத்திய அரசின் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட செய்திதான் இது.

இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்பதே அனைத்து தமிழர்களின் வேண்டுகோள். இந்த உண்மையை பாதுகாப்புத்துறை அமைச்சர் புரிந்துகொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதே மீண்டும் மீண்டும் நாம் விடுக்கின்ற கோரிக்கையாகும்.

இவ்வாறு கூறியுள்ளார்.