கர்ப்பப்பை ஆபரேசன் செய்து கொண்ட மனைவியை கேவலமாக பேசுவதாக போலிஸ் எஸ்.ஐ.மீது புகார்


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த புதுரெட்டியூரை சேர்ந்தவர் தங்கராஜ், வயது-57. இவர் பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிகிறார்.

ஏற்கனவே இவரது மனைவி இறந்துவிட்டார். அதன் பின் தங்கராஜ் பொம்மிடியை சேர்ந்த கணவனை இழந்த ராணி, வயது-47, என்பவரை கடந்த, 13 ஆண்டுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவி இருவரும் பொம்மிடி போலீஸ் குடியிருப்பில் வாழ்த்து வந்தனர்.

ராணிக்கு கடந்த மூன்றாண்டுக்கு முன் கர்ப்பபையை அகற்றுவதற்காக  ஆபரேஷன் செய்யப்பட்டது. இதிலிருந்து எஸ்.எஸ்.ஐ., தங்கராஜ், அவரது இரண்டாவது  மனைவி ராணியை கேவலமாகி பேசி வந்தார் என்றும்,  மேலும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார் என்றும், தற்போது, “உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு மருத்துவ செலவுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் பணம் கேட்க்கும் போது, கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் எஸ்.ஐ.’ தங்கராஜ் மீது ராணி அரூர் மகளிர் போலீஸில் புகார் செய்தார். இந்த புகார் குறித்து போலிஸ் எஸ்.ஐ.,விஜயா விசாரித்து வருகிறார்.

மாற்று அரசியல் புரட்சியை கொண்டு வருகிறோம்; எங்களோடு அணி திரள்வீர்கள் என்று நம்புகிறோம் : சீமான் பேச்சு


நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்தது. கூட்டத்தில் அதன் தலைவர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர்,  ‘’தமிழ்நாட்டில் பல்வேறு தடங்களில் பயணித்துவரும் நான், பலதரப்பட்ட மக்களோடு பழகி அவர்களது மனக்குமுறல்கள், காயங்களை கேட்டறிந்ததில் தெரிந்து கொண்டது, தமிழ்நாட்டில் எவரும் தமிழர் இல்லை என்பதுதான். இது வரலாற்று உண்மை. நிகழ்கால நிஜம். பல மாவட்டங்களிலும் சாதியவாதிகள் வாழ்கிறார்கள்.

 இந்த மண்ணில் தமிழர்கள் மதவாதிகளாக வாழ்கிறார்கள். இங்கு தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா. ஜனதாவை வலிமையான அரசியல் கட்சிகளாக ஆக்கி வைத்து இருக்கிறார்கள். காரணம், மதம். இதுதான் தமிழ் இனத்துக்கு நேர்ந்த அவலம். எண்ணக்கையில்தான் 8 கோடி பேர். இவர்களில் எவரும் தமிழர் இல்லை. எவராவது ஒருவர் இந்த காரணத்துக்காக காங்கிரஸ் கட்சி தேவை என்று ஒரு காரணம் சொல்ல முடியுமா? பின் எதற்கு காங்கிரஸ்?

காங்கிரசை மிதவாதம் என்றும், பா.ஜனதாவை தீவிரவாதம் என்றும் சொல்கிறார்கள். இரண்டு பேருமே ஒன்றுதான். பா.ஜனதா காவி கட்டிய காங்கிரஸ். காங்கிரஸ், கதர் போட்ட பா.ஜனதா.முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை காங்கிரஸ் இங்கு பேசினால் கேரளாவில் கம்யூனிஸ்டு வெல்லும். கம்யூனிஸ்டு இங்கு பேசினால் காங்கிரஸ் வெல்லும். வாக்குக்காக தமிழர் உரிமையை விட்டுக்கொடுக்கும் கேவலம் உள்ளது. காவிரி பிரச்சினையிலும் இதுதான் நடக்கிறது.

கடலில் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். யாராவது கேட்கிறார்களா? என் வீட்டு இழவுக்கு வராதவருக்கு எதற்கு ஓட்டு? உலகில் மிக வலிமையான கடற்படை கொண்டது இந்த தேசம். 800 மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளது இலங்கை கடற்படை. எதையாவது தடுத்து இருக்கிறதா இந்தியப்படை? பிரான்சில் சீக்கியர் தலைமுடிக்கு தந்த மரியாதையை என் தமிழ்க்குடிக்கு இந்த தேசம் தரவில்லையே.

அணுஉலையை திறந்தால் மின்சாரம் வந்துவிடுமா? அணுகுண்டு மேல் உட்கார்ந்து இருப்பது எவ்வளவு ஆபத்தோ, அதைவிட பேராபத்து அணுஉலை பக்கத்தில் குடியிருப்பது. 2 ஆண்டுகளாக கூடங்குளம் மக்கள் போராடி வருகிறார்கள். ஏன் என்று கேட்க நாதியில்லை. ராதாபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் யாராவது அணுஉலையை திற என்பார்களா?தரமற்ற கல்வி, தரமற்ற மருத்துவம் என எதையுமே தரமாக தராத இந்திய அரசு, அணுஉலை பாதுகாப்பானது என்பதை எப்படி நம்புவது?

விமானம் மோதினாலும் உடையாது என்கிறார்களே, ஒரு விமானத்தில் அப்துல்கலாம், நாராயணசாமி, சரத்குமார் இன்னும் யாரெல்லாம் திறக்கச் சொல்கிறார்களோ, அவர்களெல்லாம் ஏறி அமர்ந்து அணுஉலை மீது மோதி ஒன்றும் ஆகவில்லை என்பதை செய்துகாட்டுங்களேன். நாங்கள் நம்புகிறோம். அமைதியான மக்களை அடக்கி ஒடுக்குவதுதான் இந்த நாட்டில் ஜனநாயகமாக உள்ளது. அந்நிய முதலீட்டால் நாடு மீண்டும் அடிமைப்பட்டு போகும்.

இந்த நிலைகளை மாற்றத்தான் மக்களே! மாற்று அரசியல் புரட்சியை இந்த மண்ணில் கொண்டு வருகிறோம். இது எளிய மக்கள் எடுக்கும் புரட்சி. நாம் தமிழர் கட்சியை நாங்கள் தொடங்கவில்லை. சி.பா.ஆதித்தனார் தொடங்கினார். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய பெருமகனார் தொடங்கிய கட்சி. எந்த நோக்கத்துக்காக அவர் தொடங்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேற அவர் நிறுத்திய இடத்தில் இருந்து மானப்பிள்ளைகளான நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

தமிழ் மீட்சிதான் தமிழர் எழுச்சி. ஊழலற்ற, நீதியான, நேர்மையான ஆட்சி, இதுதான் எங்களது கொள்கை. எளிமையான பிள்ளைகளான எங்களுக்கு உங்கள் ஆதரவை கொடுத்து வலிமையான அரசியல் சக்தியாக மாற்ற வேண்டும். இது வரலாற்று தேவை. காலத்தின் கட்டாயம். இதை உணர்ந்து எங்களோடு அணி திரள்வீர்கள் என்று நம்புகிறோம்’’என்று பேசினார்.

சூது கவ்வும் விமர்சனம்


நலன் குமரசாமி குறும்பட உலகில் ஒரு ஸ்டார் இயக்குநர். அவரது ஆரம்ப கால குறும்படங்களில் நாங்க டீம் நிஞ்சா.. இப்பதான் சினிமா கத்துக்குறோம் தப்பா எடுத்தா கண்டுக்காதீங்க என அடக்கமாய் எடுத்திருந்தாலும் அவற்றில் ஒரு தரம் இருந்தது. அந்த நலன் இப்பொது நன்றாக தன்னை தயார்படுத்திக்கொண்டு எடுக்கும் முழு நீள திரைப்படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ஒரு பக்கம்.

சூது கவ்வும் படத்தில் முதல் டிசைனிலிருந்து ‘காசு பணம் துட்டு மணி’ பாடல் காட்சிவரை ஒவ்வொரு ஸ்டெப்பாக ஆச்சர்யத்தை கிளப்பிய கிரியேட்டிவிட்டி இன்னொரு பக்கம்.

எனவே ஒரு தரமான படத்தை எதிர்பார்த்துத்தான் சென்றேன். ஆனால் அந்த எதிர்பார்ப்பையும் மிஞ்சி விட்டார் நலன். இந்த அளவுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருப்பார் என எதிர்பார்க்கவில்லை.

எந்த விதத்திலும் ரிஸ்க் எடுக்காமல், பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் சொகுசாய் ஆட்களை கடத்தி காசு சம்பாதிக்கும் பிஸினெஸ்மேன் விஜய் சேதுபதி. இவர் இன்னும் சில பேரை சேர்த்துக்கொண்டு கடத்தல் வேலைகளை செய்ய அதன் தொடர்ச்சியாய் இன்னொரு வேலை வர, அதை செய்யப்போய் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் கரு.

கதை ஒன்றும் அப்படி சினிமாவை புரட்டிப்போடும் வகையறாவெல்லாம் இல்லை. ஆனால்
கதாபாத்திரங்களை உருவாக்கியதில் நலன் காட்டிய அக்கறையும், அவற்றில் இருக்கும் புதுமையும் தான் படத்தின் வெற்றிக்கான பிள்ளையார் சுழியாய் இருந்திருக்கவேண்டும்.

மேலும் ஒரு திரைக்கதை எழுத்தாளராய் நலன் பின்னிப்பெடலெடுக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் அழகாய் செதுக்கி, சொல்ல வேண்டியதை சொல்லி, அதை காமெடியாக்கி ரசிக்கவைத்து, அதே நேரத்தில் பர்பார்மென்ஸ்கும் ஸ்கோப் குடுத்து என எல்லா விதங்களிலும் கவனமாய் கையாண்டிருக்கிறார்.

காட்சிக்கு காட்சி எதாவது விதத்தில் சிரிப்பை வரவழைக்கும் வசனங்கள் டாப் க்ளாஸ். கடைசி காட்சியில் அந்த அடி உதையின் உச்சகட்ட வேதனையில் இதுதான் இருட்டறையில் முரட்டுக்குத்தா என கேட்டு சிரிக்கும் காட்சி இருக்கிறதே.. தியேட்டரே அதிர்கிறது.

விஜய் சேதுபதி.. இந்த வருடத்தில் அதிகம்பேர் பொறாமைப்படக்கூடிய நடிகர். எப்படித்தான் இந்தாளுக்கு மட்டும் இப்படி மாட்டுதோ என பலர் வியத்தாலும், இனி மேல் இந்த குறும்பட இயக்குநர்கள் தான் இன்டஸ்ட்ரியை ஆட்டிவைக்கப்போகிறார்கள் என ஏதோ ஒரு விதத்தில் யூகித்து அவர்களை மதித்து, நட்பாகி, நெருக்கமாகி தன்னை உருவாக்கிகொண்ட அவரது புத்திசாலித்தனம் கலந்த எளிமைத்தனத்திற்கு கிடைத்த பரிசு தான் இந்த தொடர் வெற்றிகள்.

இந்தப் படத்தில் தாஸ் என்ற ஒரு அட்டகாசமான கதாபாத்திரத்தில் விளையாடுகிறார். ஹீரோயிசம் என்றால் கிலோ எவ்வளவு என கேக்கும் அளவுக்கு கொஞ்சம் அசட்டுத்தனமும், நேர்மையும் கலந்த ஒரு ப்ராடாய் வருகிறார். கூடவே ஒரு காதலியையும் கூட்டிக்கொண்டு அலைகிறார் பாருங்கள்… சிரிப்பு மூட்டும் வசனங்களோ அல்லது பாடி லாங்வேஜோ இல்லாமல் எல்லோரையும் சிரிக்க வைப்பது சாதாரண விசயமில்லை. சிறப்பாக எழுதப்பட்ட காட்சியும், அதை உணர்ந்து வெளிப்படுத்தும் நடிப்பும் மட்டுமே அத்தகைய ரிசல்டை கொடுக்கும்.

இவருக்கு சற்றும் குறைவில்லாத கதாபாத்திரங்களில் சிம்ஹா, ரமேஷ்,அசோக் மற்றும் கருணா. சிம்ஹாவின் இயல்பான வெகுளித்தனமான முகம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகளில் வெகுவாய் கைகொடுக்கிறது. இவர்கள் அணைவருக்கும் இந்தப் படம் ஒரு பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும்.

அதே போல முரட்டுத்தனமா போலிஸ் அதிகாரி பிரம்மா, படம் எடுக்கும் டாக்டர் ரவுடியாய் தாஸ் என எவருமே சளைக்காமல் கலக்கியிருக்கிறார்கள்.

இவர்களுக்கிடையே முரட்டுக்காட்டில் ஒரு பூங்கொத்தாய் சஞ்சிதா ஷெட்டி.. தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத கதாநாயகி ரோல். களையாய் கலகலப்பாய் இருக்கிறார்.

சென்னை 600028 பார்த்தபோது ஒரு ஃப்ரெஷ்ஸா இருந்த்தல்லவா.. அதே போல இந்தப் படமும் ரொம்ப ஃப்ரெஷ்ஸாக இருக்கிறது.

ஒரு நல்ல படம்னா அது இப்படித்தான் இருக்கும் என நாம் வைத்திருக்கும் ஒரு கணக்கையெல்லாம் உடைக்கிறது இந்தப் படம். பெரிய கருத்தோ, மனதை தொடும் சம்பவங்களோ இல்லை. கதையையோ, கதாபாத்திரங்களின் போக்கையோ எந்த இடத்திலும் யூகிக்க முடியாது. ஆனாலும் எல்லா இடத்தில் என்ஜாய் பண்ண முடியும் என மிகததிறமையாய் எழுதப்பட்ட திரைக்கதைதான் இந்தப் படத்தின் நிஜ ஹீரோ.

அதே போல இன்னொரு முக்கியமாய் குறிப்பிட வேண்டிய நபர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இயக்குநர் எந்த அளவுக்கு காட்சிகளில் புதுமையை கொண்டுவருகிறாரோ அதே அளவுக்கு இசையிலும் இவர் ஜமாய்க்கிறார். இவரது இசை படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச்செல்கிறது என சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கலகலப்பூட்டும் இசை.

ஒளிப்பதிவாளர் தினேஷும் நிறைவாய் செய்திருக்கிறார் தன் பணியை.

அட்டகாசமான திரைக்கதை, அதற்கேற்ற நடிகர்களின் தேர்வு, அவர்களின் கச்சிதமான நடிப்பு.. ஒரு தேர்ந்த இயக்குநருக்கான லாவகத்துடன் இயக்கம் என படம் நம்மை அசரடிக்கிறது. இது முழுக்க முழுக்க நலன் குமரசாமியின் ஷோ. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் வரிசையில் உடனடியாய் சேர்ந்துவிடும் அத்தனை தகுதிகளும் இவருக்கிருக்கிறது. அவருக்கும், அவரைக் கண்டெடுத்து இயக்குநராக்கிய தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

மாற்று அரசியல் புரட்சியை கொண்டு வருகிறோம்; எங்களோடு அணி திரள்வீர்கள் என்று நம்புகிறோம் : சீமான் பேச்சு


நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்தது. கூட்டத்தில் அதன் தலைவர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர்,  ‘’தமிழ்நாட்டில் பல்வேறு தடங்களில் பயணித்துவரும் நான், பலதரப்பட்ட மக்களோடு பழகி அவர்களது மனக்குமுறல்கள், காயங்களை கேட்டறிந்ததில் தெரிந்து கொண்டது, தமிழ்நாட்டில் எவரும் தமிழர் இல்லை என்பதுதான். இது வரலாற்று உண்மை. நிகழ்கால நிஜம். பல மாவட்டங்களிலும் சாதியவாதிகள் வாழ்கிறார்கள்.

 இந்த மண்ணில் தமிழர்கள் மதவாதிகளாக வாழ்கிறார்கள். இங்கு தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா. ஜனதாவை வலிமையான அரசியல் கட்சிகளாக ஆக்கி வைத்து இருக்கிறார்கள். காரணம், மதம். இதுதான் தமிழ் இனத்துக்கு நேர்ந்த அவலம். எண்ணக்கையில்தான் 8 கோடி பேர். இவர்களில் எவரும் தமிழர் இல்லை. எவராவது ஒருவர் இந்த காரணத்துக்காக காங்கிரஸ் கட்சி தேவை என்று ஒரு காரணம் சொல்ல முடியுமா? பின் எதற்கு காங்கிரஸ்?

காங்கிரசை மிதவாதம் என்றும், பா.ஜனதாவை தீவிரவாதம் என்றும் சொல்கிறார்கள். இரண்டு பேருமே ஒன்றுதான். பா.ஜனதா காவி கட்டிய காங்கிரஸ். காங்கிரஸ், கதர் போட்ட பா.ஜனதா.முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை காங்கிரஸ் இங்கு பேசினால் கேரளாவில் கம்யூனிஸ்டு வெல்லும். கம்யூனிஸ்டு இங்கு பேசினால் காங்கிரஸ் வெல்லும். வாக்குக்காக தமிழர் உரிமையை விட்டுக்கொடுக்கும் கேவலம் உள்ளது. காவிரி பிரச்சினையிலும் இதுதான் நடக்கிறது.

கடலில் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். யாராவது கேட்கிறார்களா? என் வீட்டு இழவுக்கு வராதவருக்கு எதற்கு ஓட்டு? உலகில் மிக வலிமையான கடற்படை கொண்டது இந்த தேசம். 800 மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளது இலங்கை கடற்படை. எதையாவது தடுத்து இருக்கிறதா இந்தியப்படை? பிரான்சில் சீக்கியர் தலைமுடிக்கு தந்த மரியாதையை என் தமிழ்க்குடிக்கு இந்த தேசம் தரவில்லையே.

அணுஉலையை திறந்தால் மின்சாரம் வந்துவிடுமா? அணுகுண்டு மேல் உட்கார்ந்து இருப்பது எவ்வளவு ஆபத்தோ, அதைவிட பேராபத்து அணுஉலை பக்கத்தில் குடியிருப்பது. 2 ஆண்டுகளாக கூடங்குளம் மக்கள் போராடி வருகிறார்கள். ஏன் என்று கேட்க நாதியில்லை. ராதாபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் யாராவது அணுஉலையை திற என்பார்களா?தரமற்ற கல்வி, தரமற்ற மருத்துவம் என எதையுமே தரமாக தராத இந்திய அரசு, அணுஉலை பாதுகாப்பானது என்பதை எப்படி நம்புவது?

விமானம் மோதினாலும் உடையாது என்கிறார்களே, ஒரு விமானத்தில் அப்துல்கலாம், நாராயணசாமி, சரத்குமார் இன்னும் யாரெல்லாம் திறக்கச் சொல்கிறார்களோ, அவர்களெல்லாம் ஏறி அமர்ந்து அணுஉலை மீது மோதி ஒன்றும் ஆகவில்லை என்பதை செய்துகாட்டுங்களேன். நாங்கள் நம்புகிறோம். அமைதியான மக்களை அடக்கி ஒடுக்குவதுதான் இந்த நாட்டில் ஜனநாயகமாக உள்ளது. அந்நிய முதலீட்டால் நாடு மீண்டும் அடிமைப்பட்டு போகும்.

இந்த நிலைகளை மாற்றத்தான் மக்களே! மாற்று அரசியல் புரட்சியை இந்த மண்ணில் கொண்டு வருகிறோம். இது எளிய மக்கள் எடுக்கும் புரட்சி. நாம் தமிழர் கட்சியை நாங்கள் தொடங்கவில்லை. சி.பா.ஆதித்தனார் தொடங்கினார். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய பெருமகனார் தொடங்கிய கட்சி. எந்த நோக்கத்துக்காக அவர் தொடங்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேற அவர் நிறுத்திய இடத்தில் இருந்து மானப்பிள்ளைகளான நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

தமிழ் மீட்சிதான் தமிழர் எழுச்சி. ஊழலற்ற, நீதியான, நேர்மையான ஆட்சி, இதுதான் எங்களது கொள்கை. எளிமையான பிள்ளைகளான எங்களுக்கு உங்கள் ஆதரவை கொடுத்து வலிமையான அரசியல் சக்தியாக மாற்ற வேண்டும். இது வரலாற்று தேவை. காலத்தின் கட்டாயம். இதை உணர்ந்து எங்களோடு அணி திரள்வீர்கள் என்று நம்புகிறோம்’’என்று பேசினார்.

தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு : சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு


 அசாமைச் சேர்ந்த மகிந்தர நாத் தாஸ் என்பவர், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையை குறைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்ற சுப்ரீம் கோர்ட், அவரது மரண தண்ட னையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு ஹரகந்த தாஸ் என்பவரை கொலை செய்த வழக்கில், கவுகாத்தி காம்ரூப் கோர்ட் மகிந்தர நாத் தாசுக்கு மரண தண்டனை விதித்து கடந்த 1997ம் ஆண்டு உத்தரவிட்டது.

 இந்த உத்தரவை கடந்த 1998ம் ஆண்டு ஐகோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து தனக்கு கருணை வேண்டி ஜனாதிபதிக்கு மகிந்தர நாத் தாஸ் மனு செய்தார். அவரது மனு 12 ஆண்டுகளுக்குப்பின் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து தாஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கையை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய அண்ணன் – இந்தியாவில் அதிர்ச்சி!


இந்தியா-மும்பை மாநிலம் தானேவில் தனது தாய், தந்தை மற்றும் சகோதரியோடு வசித்து வந்த 19 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன், அவனுடைய தங்கையை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளான்.

 
தன்னை துன்புறுத்தும் அண்ணனின் செயலை பெற்றோரிடம் கூறுவதற்கு பயந்த அந்த 14 வயது சிறுமி, நேற்று கடும் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

 

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பரிசோதனையில் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்ததும், இந்த கர்ப்பத்திற்கு அச்சிறுமியின் அண்ணன் காரணம் என்பதும் தெரியவந்தது.

 

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த இளைஞனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

அண்மை காலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் நடைபெறும் இத்தகைய கலாச்சார சீர்கேடுகள் மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.