சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்


சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.”

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல்குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.”

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் ” திருமூலர்”

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.

(7) “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்!


கொழும்பு: ரக்பி விளையாட்டில் ராஜபக்சேவின் இளைய மகன், நடுவரை அடித்த விவகாரம் இலங்கையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இலங்கையில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற விளையாட்டு ரக்பி. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மூன்று மகன்களும் ரக்பி விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர்கள். இவரது இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சேதான் இலங்கை ரக்பி அணிக்கு கேப்டன். மூத்த மகன் நமல் ராஜபக்சே, இளைய மகன் ரோஹித ராஜபக்சே இருவரும் கூட‌ ரக்பியில் தீவிர‌ ஆர்வம் கொண்டவர்கள்.

இந்த நிலையில் கடந்த மே 5 ஆம் தேதியன்று, கொழும்பில் உள்ள ஹேவ்லாக்ஸ் மைதானத்தில் ‘இண்டர்கிளப் ரக்பி டோர்னமென்ட்’ நடந்தது. இதற்கான தகுதிச் சுற்றில் Navy SC அணியும், Police A அணியும் மோதின. வழக்கமாக‌ Navy SC அணிக்கு, ராஜபக்சேவின் இரண்டாவது மகனான யோஷித தான் கேப்டனாக இருப்பார். ஆனால் அன்றைய போட்டிக்கு கடைசி மகன், ரோஹித (22) கேப்டனாக இருந்தார்.

போட்டியின் இறுதியில் Police A அணியிடம் Navy SC அணி தோற்றுப்போனது. இதனால் கடுப்பான ரோஹித, போட்டிக்கு நடுவராக இருந்த டிமிட்ரி குணசேகர என்பவர் மீது பாய்ந்தார். அவரது சட்டைக் காலரைப் பிடித்து தாக்குதல் நடத்தினார். அதிர்ச்சி அடைந்த நடுவர் தடுமாறி நின்றார்.

இந்தப் பிரச்னை நடந்தபோது பலர் பார்த்திருந்தபோதும் யாரும் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை. அடிவாங்கிய நடுவர் கூட புகார் கொடுக்க முன்வரவில்லை. ஊடகங்கள் மூலமாக விஷயம் வெளியே வந்திருக்கிறது என்றாலும், “அன்று நடந்த அனைத்தும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது” என ட்விட்டரில் சொல்லியிருக்கிறார் ராஜபக்சேவின் மூத்தமகன் நமல். ஸ்ரீலங்கா ரக்பி ஃபுட்பால் சங்கத்தின் தலைவர் அசங்க சேனவர்த்தன, “தகாத வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம். அடித்திருப்பார் என நான் நம்பவில்லை” என்கிறார்.

அப்பனுக்குப் பிள்ளை தப்பாம பொறந்திருக்கு!

லண்டனில் பயங்கரம் : நடுரோட்டில் ஒருவர் வெட்டிக்கொலை : தீவிரவாத தாக்குதல்?


லண்டனில் நேற்றிரவு இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து தாக்குதல் படுகொலையின் பின்னர் அங்கு பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

தென் கிழக்கு லண்டன் பகுதியின் வூல்விச் நகரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இரு  நபர்கள்,  கத்தி மற்றும் வாள் கொண்டு கொடூரமான முறையில் ஒருவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்செல்ல முனைகையில் காவல்துறையினரால் சுடப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளானவரின் உடலை இராணுவ முகாம் அருகே வீசிச்சென்றுள்ளனர். அவர் ஒரு பிரித்தானிய இராணுவ வீரராக இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதல் சம்பவத்தை தெருக்களில் சென்ற பலர் நேரடியாக பார்த்துள்ளனர். சில புகைப்படங்கள், வீடியோ பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருப்பின் கடுமையாக கண்டிப்பதாக பிரான்ஸ் பிரதமர் பிரன்ஸுவாஸ் ஹாலந்து தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதல்களுக்கு ஒரு போதும் பிரித்தானியா இடமளிக்க போவதில்லை என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவ இடத்தில் தொலைக்காட்சி கமெரா ஒன்றின் முன்னர் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ள நபர் ஒருவர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இரத்தக்கறை படிந்த கத்தியை வைத்திருந்துள்ளார். இவரே சந்தேக நபராக இருக்க முடியும் எனவும் கருதப்படுகிறது.


‘எங்களுக்கு எதிராக எப்படி யுத்தம் மேற்கொள்கிறார்களோ, அதே போன்று நாங்களும் அவர்களுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்ள வேண்டும். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல். இச்சம்பவத்தை நேரடியாக பார்த்த பெண்ணுக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு நாளும், எமது நிலத்தில், எமது பெண்கள் இதைத்தான் காண்கிறார்கள். நீங்கள் ஒரு போதும் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். உங்கள் அரசுக்களை மாற்றிவிடுங்கள். அவர்கள் உங்கள் மீது அக்கறையே எடுப்பதில்லை’ என தெரிவித்துள்ளார். அதோடு ஒரு பெண்ணூடனும் அவர் கையில் கத்தியுடன் நின்று பேசிக்கொண்டிருந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இதேவேளை இக்கொலைச்சம்பவத்தின் பின்னர் குறித்த பகுதியில் பள்ளிவாசல் மீது தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.  இதேவேளை இங்கிலாந்து பாதுகாப்பு லீக் அமைப்பின் 100க்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் நேற்றிரவு வூல்விச்சில் முகமூடி அணிந்தவாறு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிகளில் பாலியல் கொடுமை குறித்து புகார் செய்ய ஹெல்ப்லைன் வசதி அறிமுகம்!


பள்ளிகளில் பாலியல் கொடுமை குறித்து புகார் செய்ய ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஹெல்ப்லைன் பற்றிய தகவல் வசதி செய்யப்பட்டுள்ளது

இதை பள்ளி மாணவ-மாணவிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம் முதல் முறையாக அவர்களின் பாடப்புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

மைனர் மாணவ மாணவிகள் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள என்று அரசு சிறப்பு கவனம் எடுத்து இந்த ஹெல்ப் லைன் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. பாலியல் வன்கொடுமை குறித்து புகார் செய்ய உதவும் ஹெல்ப் லைன் வசதி குறித்து முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டு பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மாணவ-மாணவிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் பாடப்புத்தகத்தில் அச்சிட அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து முதற் கட்டமாக 11ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஹெல்ப்லைன் குறித்த தகவல் இடம்பெறுகிறது. பிளஸ் 1 பாடப்புத்தகத்தின் அட்டையில் இந்த விவரம் அச்சிடப்பட்டு இருக்கும். தற்போது 11ம் வகுப்பு புத்தகங்களில் இடம்பெறும் ஹெல்ப் லைன் பற்றிய தகவல் விவரங்கள், அடுத்த ஆண்டில் இருந்து அனைத்து வகுப்பு புத்தகங்களிலும் இடம்பெறும், என்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் சரவணா வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பாலியல் கல்வி கட்டாயம் தேவை என்கிற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே இருந்துவரும் நிலையில், பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த இந்த பாலியல் கொடுமை குறித்த புகார் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

அரபு நாட்டில் பெண் குழந்தையுடன் ஓர் இந்தியன்!


நெஞ்சைப் பிழியும் சோக நிகழ்வு!!

அராபிய தேசமொன்றின் தெருக்களிலே அலைந்து திரியும் ஓர்  இந்தியனைத் தெரியுமா உங்களுக்கு…? மூன்றே வயதான தனது அழகிய குழந்தையையும் தூக்கிக் கொண்டு எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு நாட்டில், பூங்காவிலும் தெருவோரங்களிலும் தனது வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கும் அந்த இந்தியனின் கதை பரிதாபமானது.

அவரது பெயர் முஹம்மது சிக்கந்தர். செல்வந்த நிலமான பஹ்ரைனுக்குத் தொழில் தேடி மனைவி, பிள்ளைகளுடன் போனார். மனைவிக்கு அங்கு நர்ஸ் வேலை கிடைத்தது. சிக்கந்தரோ அங்குள்ள ஒரு பஹ்ரைன் நாட்டுக்காரர் ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டார்.

வர்த்தகம் நன்றாகவே நடந்தது. இந்தியாவிலிருந்து மார்பிள் கற்களை இறக்குமதி செய்து விற்கும் இந்த வர்த்தகம் நடந்து கொண்டிருக்கும் 2010ம் ஆண்டு, இவருக்கு சரா என்ற அழகான குழந்தையும் பிறந்தது.
ஆனால், திடீரென, இவரது பஹ்ரைன் வர்த்தகக் கூட்டாளி இவரை ஏமாற்றத் தொடங்கினான். ஏறத்தாழ 65,000 பஹ்ரைன் தினார்களை (ஒரு பஹ்ரைன் தினார்=145 இந்திய ரூபாய்) சிக்கந்தரிடமிருந்து அபகரித்துக் கொண்டு, இன்று தருகிறேன்..நாளை தருகிறேன் என்று இழுத்தடிக்கத் தொடங்கினான்.

இந்த நிலைமையில் தனது மகள் சராவுக்கான பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்யக்கூட சிக்கந்தரிடம் பணமிருக்கவில்லை. அதுமட்டுமன்றி, மனைவியின் நர்ஸ் வேலையும் போயிற்று.

சிக்கந்தர் மிகவும் கஷ்டத்திற்குள்ளானார். வேறு வழியில்லாமல், 6 மற்றும் 4 வயதுடைய தனது இரு குழந்தைகளுடன் மனைவியை இந்தியாவுக்கு அனுப்பினார். கடைசி மகளான சாராவுக்கு பாஸ்போர்ட் இல்லாததால் அவளை அனுப்ப முடியவில்லை.

தனது பணத்தைக் கேட்டு அந்த பஹ்ரைன்
காரனிடம் தினம் தினம் போனார் சிக்கந்தர். கடைசியில் அவன் 45,000 பஹ்ரைன் தினாருக்கு 4 காசோலைகள் எழுதிக் கையில் கொடுத்தான். ஆனால் வங்கியில் பணமில்லையென்று அந்தக் காசோலைகள் திரும்பி விட்டன.

ஒற்றை அறை ஒன்றில் தனது மகளுடன் குடியிருந்த சிக்கந்தர் தனது அறை உரிமையாளருக்கு 1000  தினார் வாடகைப் பாக்கி கொடுக்க வேண்டியிருந்தது. துரதிருஷ்டவசமாக அந்த அறையில் தண்ணீர், மின்சாரம் எதுவுமே இல்லாதும் போயிற்று.

வேறு வழியில்லாமல் தனது மூன்று வயதுப் பெண் பிஞ்சுடன்  வீதிக்கு வந்தார் சிக்கந்தர். பஹரைனின் மனாமா பார்க்கில்- அதனை அண்டிய பள்ளிவாசலில்-தெருவில் எனக் காலத்தை இப்போது ஓட்டிக் கொண்டிருக்கிறார். கடையில் விற்கும் அராபிய ரொட்டி தான் இவர்களது அன்றாட உணவு.

இவர் குடியிருந்த அறை உரிமையாளர் கொஞ்சம் இரக்கமுள்ளவர். அதனால் இவரிடம் வாடகைப் பாக்கியைக் கேட்டு நச்சரிக்கவில்லை. எனினும் மின்சாரம் ,தண்ணீர் இல்லாத அந்த அறைக்கு நடுநிசியில் போய், மசூதி திறக்கும் மூன்று மணிக்கு இவர் வெளியேறி விடுகிறார்.
”கொசுக்கள், பூச்சிகள் இரவில் எனது மகளைக் கடித்துக் குதறி விடுகின்றன. அதிலிருந்து தப்புவதற்காகவே கொஞ்ச நேரம் அறைக்குப் போகிறேன்..” என்று சொல்கிறார் சிக்கந்தர்.

இந்திய அரசாங்கத்திற்கும் பஹ்ரைனிலுள்ள இந்திய தூதரகத்திற்கும் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. அவர்கள், அந்தச் சிறு பெண் குழந்தைக்காகவாவது, சிக்கந்தர் விடயத்தை மனிதாபிமான முறையில் அணுகி, நல்ல தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதே பலரின்  எதிர்பார்ப்புமாகும்.

தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப் படும் பெண்கள்!


ஆடை மனித நாகரீகத்தின் சின்னம். நிர்வாணமாக திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சி கண்டபோது ஆடையும் வளர்ந்தது. இலை, குழைகளால் மறைவிடத்தை மறைத்த மனிதன், அது போதாதென்று மற்றைய பாகங்களையும் மறைக்கும் ஆடைகளைக் கண்டு பிடித்து அணியத் தொடங்கினான்.
இடுப்புக்கு மேல் ஆண் தன்னை மறைக்க அக்கறை காட்டாத போது கூட, இடைக்கு மேலும் தன்னை மறைக்கப் பெண் அக்கறை காட்டினாள். இவை இயல்பாக நிகழ்ந்தவை. பெண்ணுக்கே உரிய நாணம் அவளை அவ்வாறு  மறைக்க வைத்தது. இன்னும் நாணம் கூடிய பெண் தன்னை மேலும் மறைத்தாள். இன்று கூட உத்தம பெண்கள் தங்களை ஆண்களின் விஷ விழிகளிலிருந்து எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளலாம் என்று சிந்திக்கவே செய்கிறார்கள்.
என்னதான் தனி நபர் சுதந்திரம், மனித உரிமை என்று சொல்லிக் கொண்டாலும் ஒரு ஆண் நிர்வாணமாகவோ, வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து வீதியில் போவதையோ, வேலைக்குப் போவதையோ காண முடிவதில்லை. காரணம் வெட்க உணர்வு. இதே நிலைமைதான் பெண்களுக்கும்.
முகம் திறந்து- அங்கங்களின் பரிமாணங்களைக் காண்பிக்கும் எல்லாப் பெண்களும் ஆண்களினால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதில்லை. ஆனால் அப் பெண்கள் ஆண்களினால் மனதளவில் சுய இன்பம்  மற்றும் கரமைதுனம் போன்ற செயற்பாடுகளினால் புணரப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?
இவ்வாறு,  தனக்குத் தெரியாமலேயே தான் கற்பழிக்கப் படுவதை எந்த நல்ல குணம் கொண்ட பெண்தான் விரும்புவாள்?
ஆக- முகம் தொடக்கம் தன் அங்கங்களின் பரிணாமம் தெரியாதவாறு ஆடை அணிவதிலிருந்தும் ஒரு பெண் தவிர்ந்து கொள்வாளாயின், அவள் தன்னை மனதளவில் கூட உறவு கொள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்காதவள் ஆகி விடுகிறாள்.
தனது மனைவி-தாய்-அக்கா, தங்கைகள், தனது பெண் பிள்ளைகள் – யாரோ பல ஆண்களினால் மனதளவில் புணரப்படுவதை எந்த ஆண்தான் விரும்பப் போகிறான்..?
இத்தகைய இழி நிலைகளிலிருந்தும் பெண்களைப் பாதுகாக்கவும்தான் இஸ்லாம்பெண்களுக்கு ஆடை விஷயத்தில் வரையறைகளை வகுத்திருக்கிறது என்பது எண்ணம்.
ஆழமாகச் சிந்தித்தால் இன்னும் பல உண்மைகள் புலப்படும் என்பது எனது நம்பிக்கை.