யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ் மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையேயான வாராந்தக் கலந்துரையாடலுக்காக ஊடகவியலாளர்கள் பொலிசாரினால் அழைக்கப்பட்டபோதிலும் கடந்த வாரத்தில் நடைபெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலோ பொலிஸாரின் விசேட செயற்றிட்டங்கள் தொடர்பிலோ எந்தவோரு தகவலும் வழங்காது ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம் இன்று இடம் பெற்றது.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணம் ஊடகவிலாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் வாராந்தம் சந்திப்பு இடம் பெறுவதும் முக்கிய விடங்கள் சம்பந்தமான செய்திகள் பொலிசாரினால் ஊடகவிலாளர்களுக்கு வழங்கப்படுவது வழமை .
இந்த நிலையில் கடந்த மாதம் முதல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடகவிலாளர்களுடனான சந்திப்பை தவித்துக்கொண்டதுடன் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்த வாராந்த ஊடகவிலாளர் சந்திப்பை நடத்திவந்தார்.
எனினும் அவரும் கடந்த வாரங்களில் ஊடகவியலாளர்களது கேள்விகள் சிலவற்றிற்கு பதிலளிக்க முடியாது கலந்துரையாடல்களை பாதியில் முடித்துக்கொண்டு சென்றிருந்தார்.
அதேபோலவே இந்த வாரத்திற்கான சந்திப்பு இன்று பகல் 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகத் எம்.மகிந்தஎக்கநாயக்க தலைமையில் இடம் பெற்றது.
வழமை போன்று இல்லாது இன்று ஊடகவியலாளாகளிடம் ஊர் பிரச்சனைகள் சம்பந்தமாக கேட்டுவிட்டு வழமையான தகவல்கள் வழங்காது கலந்துரையாடலை முடித்துக் கொண்டனர். இதனால ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.