நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அவரது அலுவலகத்தில் செய்தி யாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’மே-18ல் கடலூர் புதுநகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும். மாலை 3 மணிக்கு பேரணி நடைபெறும். காலை முதல் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மற்ற மாநிலங்களில் இருக்கும் அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள்’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பினர்.
அந்த பிறமாநில தலைவர்கள் யார்?
அவர்கள் யார் யார் என்று இப்போது சொன்னால் அவர்கள் வருவதை தடுத்துவிடுவார்கள்.
பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறதே?
எங்களுக்கும் அந்த நிலைதான் இருந்தது. அதையும் மீறி நாங்கள் அனுமதி பெற்றிருக்கிறோம்.
சாதிய ரீதியாக தமிழ்நாட்டில் நடந்துவரும் பிரச்சனை பற்றி?
திருமாவளவனும் ராமதாஸூம் கூட்டணிக்காக ஒன்று சேர்ந்தார்கள். அவர்கள் மக்களுக்காக ஒன்று சேர்ந் திருந்தால் நாம் தமிழர் கட்சியை நான் தொடங்கியிருக்க தேவை இருந்திருக்காது.
சுப்பிரமணியசாமி தமிழர்களை பொறுக்கி என்று சொல்கிறாரே?
பெரிய அரசியல் தலைவர்கள் பேசும்போது அதை நாம் விமர்சிக்கலாம். உதிரிகள் பேசுவதை நாம் ஏன் கணக் கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.