சடலத்துடன் உடலுறவு கொண்ட நபர் : அதிர்ச்சிச் சம்பவம்!


சவூதி வைத்தியசாலையொன்றின் பிண அறையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் இறந்த பெண் ஒருவரின் சடலத்துடன் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டில் பங்காளதேசைச் சேர்ந்த சாகிர் என்ற 33 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்திய சாலையின் ஏனைய ஊழியர்கள் பின்னிரவு நேரத்தில் கடமை நிறைவடைந்து திரும்பும் நிலையில் குறித்த நபர் பிண அறையில் பதுங்கியிருந்தே மேற்படி குற்றச் செயலினைப் புரியும் போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் மேற்கு மாகாண நகரங்களில் ஒன்றான மக்காவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் சக ஊழியர் ஒருவர் சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளதுடன் அவரது முகத்தில் பல முறை அறைந்துள்ளார். இதனை அடுத்து வைத்தியசாலை நிர்வாகம் குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிய வருகிறது.

குறித்த பங்களாதேசை சேர்ந்த ஊழியர் பிணங்களுடன் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வது இது முதன் முறை அல்ல என்பதும் ஏற்கனவே பல முறை இவ்வாறு அநாகரீகமாக பிண அறையில் நடந்து கொண்டுள்ளமையும் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.
சவூதி அரேபியாவை பொறுத்தவரை இவ்வாறானதொரு சம்பவம் பதிவாவது இதுவே முதன் முறையாகும். இந் நிலையில் அனைத்து வைத்திய சாலைகளினதும் பிணவறைகளை கண்காணிக்கும் விதமாக கண்காணிப்பு கமராக்களை பொருத்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றங்கள் தொடர்பில் இறுக்கமான சட்டங்களை கொண்டுள்ள சவூதியில் குறித்த நபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

ஆசையை வெல்ல பெண்களை நிர்வாணமாக்கி உடன் தூங்கினார் காந்தி – அமெரிக்க இணையதளம்!


மகாத்மா என்று இந்திய மக்கள் கொண்டாடும் காந்தி தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களை நிர்வாணமாக தன்னுடன் படுக்குமாறு கூறியதாக கிராக்கெட் டாட் காம் என்ற அமெரிக்க இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க இணையதளமான கிராக்கட் டாட் காம் மகாத்மாக காந்தி குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், பல போராட்டங்கள் நடத்தி இந்தியாவுக்கு சதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தியை புனிதராக மக்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அவர் தனது 70 வயதில் கூட இளம் பெண்களை நிர்வாணமாக ஆடையின்றி இருக்கும் தன்னுடன் படுத்து தூங்குமாறு கூறியுள்ளார்.
காந்தி ஆசிரம விதிப்படி அங்குள்ள பெண்கள் ஆடையின்றி காந்தியுடன் தூங்க வேண்டும்.
ஆசையை வெல்ல அவர் இவ்வாறு செய்தாராம். காந்தி வங்கம் சென்றபோது தனது 18 வயது உறவுக்கார பெண்ணை தன்னுடன் ஆடையின்றி தூங்கச் செய்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்திக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், காந்தியை பற்றிய பிற சர்ச்சைகள் குறித்து இன்னொரு பத்திரிக்கையின் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவல்கள்…
ஹிட்லருக்கு கடிதம்
காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தில், உங்கள் நாட்டின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றை நாங்கள் ஒரு போதும் சந்தேகித்தது இல்லை. மேலும் உங்கள் எதிர்ப்பாளர்கள் கூறுவது போன்று நீங்கள் ஒரு அரக்கன் என்று நாங்கள் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
காந்தி ஒரு ‘கே’
காந்தி ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருப்பாரோ என்ற சந்தேகத்தை அண்மையில் வெளியான சில கடிதங்கள் வலுப்படுத்தியுள்ளன. தென்னாப்பிரிக்க பாடி பில்டர் ஹெர்மன் காலன்பாக் மற்றும் காந்தி இடையேயான கடிதங்கள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.
காந்திக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை?
காந்தியின் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. ஆனால் காந்திக்கு ஏன் அந்த நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பதும் சர்ச்சையாக உள்ளது.

பவர்ஸ்டார் எப்போ வருவார்? : பாதியில் நிற்கும் படப்பிடிப்பால் எரிச்சலான டைரக்டர்கள்!


பவர்ஸ்டார் எப்போ வருவார்? : பாதியில் நிற்கும் படப்பிடிப்பால் எரிச்சலான டைரக்டர்கள்!

மோசடி வழக்கில் வேலூர் ஜெயிலில் இருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசனை தங்கள் படங்களில் கமிட் செய்த டைரக்டர்கள் எல்லோரும் இப்போது எரிச்சலில் இருக்கிறார்களாம்.

பவர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழ்சினிமாவில் வலம் வரும் சீனிவாசன் ஆனந்த தொல்லை, லத்திகா படங்களில் ஆகிய சொந்தப்படங்களில் நடித்த இவரை சந்தானத்துடன் நடித்த கண்ணா லட்டுதின்ன ஆசையா படம் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து அழகன் அழகி, ஒன்பதுல குரு உட்பட படங்களில் பெரும் தொகை கொடுத்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட வைத்தனர்.

அந்தப்படங்களின் மூலமும் பாப்புலரான அவரை பல டைரக்டர்கள் தங்கள் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை துவங்கினர்.

சிவா, சந்தானம் நடிக்கும் யாயா படத்திலும், சும்மா நச்சுன்னு இருக்கு படத்திலும் முக்கியமான கேரக்டரில் அவர் நடிக்கிறார். ஆனால் தற்போது ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரை பவர் ஸ்டார் சீனிவாசன் பணம் வாங்கித்தருவதாக பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதால் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் அவர் கால்ஷீட் கொடுத்த படங்களுக்கு குறிப்பிட்ட தேதிகளில் நடித்து கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.அதேபோல ஏற்கெனவே அவர் கமிட்டாகி நடித்து வந்த படங்களின் படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. இப்படியே மொத்தம் நான்கு படங்கள் இவரால் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் எரிச்சலான பல டைரக்டர்கள் பவர் ஸ்டார் சீனிவாசன் ரிலீசாகி வரும்வரை காத்திருப்பதா? அல்லது அவரை நீக்கிவிட்டு வேறு காமெடி நடிகர்களை நடிக்க வைத்து படங்களை முடிப்பதா? என்ற யோசனையில் இருக்கின்றனர்.

மீண்டும் இலங்கையில் இன்புளுவன்சா AH1N1 வைரஸ்!


இலங்கையில் மீண்டும் இன்புளுவன்சா AH1N1 என்ற வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பலர் கடந்த சில தினங்களில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது சாதாரண வைரஸாக இருக்கின்ற போதும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்றுவதில் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பால் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் குறித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு, பொது சுகாதார பிரிவு இதுவரை கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இன்புளுவன்சா AH1N1 என்ற வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தாவிடின் அது நாடு முழுக்க பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

சேது சமுத்திர திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.


உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ராமர் பாலம் வழியாக சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும். ராமர் பாலத்தை சேதப்படுத்தவோ, உடைக்கவோ கூடாது என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், இதற்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது.

முத்த காட்சியில் நடித்தால் சர்ச்சை கிளப்புவதா? இனியா கோபம்


சென்னை: ‘முத்தக்காட்சியில் நடித்தால் சர்ச்சை கிளப்புவது ஏன்?‘ என்றார் இனியா. வாகை சூடவா, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்திருப்பவர் இனியா. அவர்

கூறியதாவது:மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான டிராபிக் படம் தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்‘ என்ற பெயரில் ரீமேக் ஆனது. ‘டிராபிக்‘ல் ரம்யா நம்பீசன் ஏற்று நடித்த வேடத்தை தமிழில் நான் நடித்தேன்.
இதைத் தொடர்ந்து ரம்யா நம்பீசன் நடித்த ‘சாப்பா குரிஷு‘ என்ற படம் தமிழ் ரீமேக்காக Ôபுலிவால்‘ என்ற பெயரில் உருவாக உள்ளது. கிராமத்து வேடங்களில் என்னை பார்த்தவர்கள் மாடர்னாக துணிச்சலான வேடங்களில் நடிக்கும்போது அதை சர்ச்சையாக்குகிறார்கள்.
‘அம்மாவின் கைப்பேசி‘ படத்தில் ஹீரோவுடன் நடித்த முத்தக்காட்சி விமர்சிக்கப்பட்டது. ‘புலிவால்‘ படத்திலும் முத்தக்காட்சி இருக்குமா என்கிறார்கள்.
மலையாளத்தில் இப்படம் வெளியானபோது ஹீரோ பஹத் பாச¤லுடன் ரம்யா நம்பீசன் நடித்த முத்தக்காட்சி இடம்பெற்றது. தமிழில் அப்படியே ரீமேக் செய்வார்களோ என்ற சந்தேகம் இருந்தது. ‘புலிவால்‘ படம் சீன் பை சீன் அப்படியே காப்பி அடித்து எடுக்கப்போவதில்லை. இவ்வாறு இனியா