ஐ.பி.எல் என்ற மூன்று எழுத்து, பாரத தேசத்தின் பாராளுமன்றம் முதல் பட்டி தொட்டி வரை பேசும் விஷயமாகிவிட்டது.
ஐ.பி.எல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஒரு அமைச்சரின் பதவியையும் காவுவாங்கியுள்ளது. காரணம் இதன் பின்னால் நடந்த திரை மறைவு விவகாரங்கள் வெளியே வந்தததால்தான்.
2008ல் தான் முதன் முதலில் ஐ.பி.எல் 20-20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களுர் ராயல் சேலஜ்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி என 8 அணிகள் உருவாக்கப்பட்டது.
இந்த அணிகள் சந்தையில் ஆடு, மாடுகள் ஏலம் விடப்படுவதை போல ஏலம் விடப்பட்டன. ஏலத்தில் பெருமுதலாளிகளும், சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டு அணிகளை ஏலம் எடுத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட் சீனுவாசனும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஷில்பா ஷெட்டியும், டெக்கான் அணியை டெக்கான்கிரானிக்கல் செய்திதாள் நிறுவனமும் 300 கோடி, 400 கோடிக்கு என ஏலம் எடுத்தனர். அதன் பின் வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். உள்நாட்டு வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரை ஏலம் விடப்பட்டனர். விரர்களுக்கு ஏற்றாற்போல் 1 கோடி முதல் 6 கோடி வரை ஏலம் போனார்கள். ஏலத்துக்கு பின் மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களுர், சென்னை என பாரததேசத்தின் பல பகுதிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
சில ஆயிரம் முதல் பல ஆயிரம் என டிக்கெட்டுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிகள் நடக்கும் காலத்தில் இந்தியாவில் வேறு எந்த விவகாரமும் நடக்கவில்லை. இந்திய மக்கள் அனைவரும் சோறு தண்ணியில்லாமல் இந்தவிளையாட்டை காண உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை போல விளம்பரம் செய்யப்பட்டது.
போட்டிகள் நடந்து முடிந்தபோது ஐ.பி.எல் அமைப்பும், அணிகளின் முதலாளிகள் எதிர்பார்க்காத அளவுக்கு பணம் கொட்டியிருந்தது. இந்த மயக்கம் இரண்டாம் ஆண்டுக்கான போட்டியை பிரமாண்டமாக நடத்தியது. அது மட்டுமல்ல வித விதமாக வீரர்களையும் குளிப்பாட்ட முடிவு செய்தனர் அணி முதலாளிகள்.
அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மேட்ச்சை சில வாரங்கள் தள்ளி வையுங்கள் என உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிக்கை விடுத்தார். அதெல்லாம் முடியாது என சூடாக அறிக்கை விட்டார் ஐ.பி.எல்அமைப்பின் தலைவர் லலித்மோடி. அதோடு நிறுத்தவில்லை பாரத தேசத்தில் பாதுகாப்பு இல்லை என சொல்லிவிட்டார்கள் எனக்கூறி பாராத தேசத்திற்கு அப்பால் தென் ஆப்ரிக்காவில் போட்டிகளை நடத்தியது ஐ.பி.எல் அமைப்பு. பணத்தை வாரி குவித்தது.
தற்போது முன்றாம் ஆண்டுக்கான போட்டி பாரத தேசத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் போட்டியின் போதும், போட்டி முடிந்த இரவு நேரத்தில் நடந்த விவகாரங்கள் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தின. கடந்த ஆண்டு வெளிநாட்டில்நடந்ததால் அவ்வளவாக தெரியாத விவகாரங்கள் இந்த ஆண்டு வெட்ட வெளிச்சமானது.
ரசிகர்களை கவர்கிறேன் என விளையாட்டு திடலில் பார்வையாளர்கள் பகுதியில் உள்ளாடை தெரியும் பாவாடையுடன் நடன பெண்களின் ஆட்டம் களை கட்டியது. வீரர்கள் சிக்சர்ஸ் அடிக்கும் போது டிவி கேமராக்களின் பார்வை மங்கைளின் மார்பு பக்கம் திரும்பியது. இதனால் கிரிக்கெட் மீது ஆர்வம்மில்லாதவர்களை கூட இந்த நடன பெண்களின் ஆட்டத்திற்காக பார்க்க வைத்தது.
விளையாட்டு நேரம் முடிந்ததும் வீரர்கள் தங்கிய ஹோட்டல்களில் வீரர்களுக்காக அவர்கள் சந்தோஷ படுத்த பார்ட்டி தருகிறேன் என குட்டி-புட்டிகளை சப்ளை செய்து தூள் பறக்க வைத்தனர். இதனால் விடிய விடிய இந்த விளையாட்டில் கவனம் செலுத்தியவீரர்கள் மைதானத்தில் ஆடிய நிஜ ஆட்டத்தை பார்த்து ரசிகர்களை எச்சில் துப்ப வைத்தது.
சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்து போன ரசிகர்கள் இந்த ஆட்டத்தை பார்த்து ஏமாந்து நொந்து போயிருந்த நேரத்தில் ரசிகர்கள் பகுதியில் ஆட்டக்காரிகள் ஆடிய ஆட்டம் ரசிகர்களை தூங்க விடாமல் செய்ததோடு கொடுத்த பணத்துக்கு இதையாவுது பார்க்கமுடிஞ்சதே என ஓரளவு மனம் நிம்மதியடைய வைத்தது.
இந்நிலையில் தான் மத்திய அரசையும் தூங்கவிடாமல் செய்து விட்டது டுவிட்டர் இணையதளம். ஐ.பி.எல் உருவாக்க தலைவரான லலித்மோடி டுவிட்டர் தளத்திலுள்ள தனக்கான பக்கத்தில், அமைப்பில் இந்த ஆண்டு புதியதாக கொச்சி, புனோ அணியை உருவாக்கிய போது கேரளாவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சசிதரூர் கொச்சி அணியின் 70 கோடி மதிப்பிலான 20 சதவித பங்குகளை தனது தோழி காஷ்மீர் சுனந்தாவுக்கு தரச்சொன்னார் அதன்படி அவருக்கு தரப்பட்டது என எழுதிவிட்டு போனார்.
வெளியுறவுத்துறை இணையமைச்சரான சசிதரூர், முதலில் அந்த மாதிரி எதுவுமில்லை என்றார், பின் நான் தவறாக எதுவும் பேசவில்லை என்றார், கடைசியாக பங்குகள் தரச்சொன்னதில் எந்த விதி முறை மீறலும் இல்லை என்றார். எதிர்கட்சிக்கள்விடவில்லை. கடைசியில் அவரின் அமைச்சர் பதவியை பறித்தது காங்கிரஸ் தலைமை.
தன் ஆட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தியதோடு காட்டிக்கொடுத்த மோடியை விடக்கூடாது என காங்கிரஸ் தன் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்தது. அந்த ஆரம்பம் பல மத்திய அமைச்சர்களின், அரசியல்வாதிகளின், பெருமுதலாளிகளின், சினிமா பிரபலங்களின் நிம்மதியை அழித்தது.
காரணம் ஐ.பி.எல் லில் உள்ள 10 அணியின் முதலாளிகளில் சிலர் உண்மையான முதலாளிகள் அல்ல. சில மத்திய அமைச்சர்கள், பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள் தான் அந்த அணிகளின் முதலாளிகள். ஒவ்வொரு அணியிலும் அரசியல்வாதிகளுக்கு பங்கு உண்டு. (தேசியவாத காங்கிரஸ் தலைவர் கிரிக்கெட் நிர்வாக மன்னன் சரத்பவார், காங்கிரஸ் கட்சியின் விமானத்துறை அமைச்சர் பிரபுஃல் பட்டேல்) இது மத்திய அரசுக்கும் தெரியும்.
இவ்வளவு உறுதியாக சொல்ல மற்றொரு காரணம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 300 கோடி தந்து ஏலம் எடுத்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி(?) 300 கோடிக்கு ஒரு அணியை ஏலம் எடுக்கிறார் என்றால் அவர் சுமார் 1000 கோடிக்கு சொத்து உள்ளவராகயிருக்க வேண்டும் அப்படியிருந்தால் மட்டுமே அவரால் 300 கோடிக்கு ஏலம் எடுக்க முடியும். ஆனால் நடிகை ஷில்பா ஷெட்டி அந்தளவுக்கு வசதியான பணக்கார குடும்பத்தை சார்ந்தவர் இல்லை.
அப்போ அந்த 300 கோடி? அது பெருதொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் கறுப்பு பணம். அந்த பணத்தை வெள்ளையாக்க சினிமா பிரபலங்களை முன்னிறுத்தி இவர்கள் பின்னால் இருந்து பணம் கொட்டியுள்ளார்கள். அதனால் தான் 80 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஐ.பி.எல் அமைப்பு மீது இதுவரை சின்ன கணக்கு வழக்கு கூட மத்திய அரசு கேட்கவில்லை. அதோடு இவ்வளவு பணம் புழங்கும் இந்த அணிகளின் உண்மையான உரிமையாளர்கள் யார், யார் என்பது இதுவரை ஜனநாயக நாட்டில் பொதுமக்களுக்கு தெரியாமல் உள்ளது.
தெரிந்து கொள்ளும் உரிமை இந்திய குடிமகனுக்கு உண்டு. காரணம், இந்த 80 ஆயிரம் கோடி பணம் ஏதே இவர்கள் பாக்கெட்டில் இருந்து எடுத்து ஒருவருக்கொருவர் கை மாற்றிக்கொண்ட பணமல்ல. இந்தியாவின் 110 கோடி மக்களின் பணம்.
நம்நாட்டில் விவசாயம் செய்ய வழியில்லாமல், பணமில்லாமல் வங்கி வாசலில், நகை கடைகளில், கந்து வட்டிக்காரன் வீட்டில் காத்திருக்கும் விவசாயிகளின், மூட்டை தூக்கம் தொழிலாளியின், சாக்கடை அள்ளும் கூலியாளின் பணம்மது. பதவியை, அதிகாரத்தை தவறான வழியில் வைத்து உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி, அரசு திட்டத்தில் கொள்ளையடித்த மக்களின் பணம். அரசியல்வாதிகளிடமுள்ள இந்த கறுப்பு பணம் தான் இந்த விளையாட்டு மூலம் வெள்ளையாக மாறிக்கொண்டியிருக்கிறது.
நம்நாட்டில் ஒரு வேலை சோற்றுக்கு வழியில்லாமல் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 45 கோடி. இதை மாற்ற பாரத தேசத்தில் யாரையும் காணோம். இந்த பண முதலைகள் தேசத்தின் நலனை பார்க்காமல், பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல், கலாச்சாரத்தை காலில் போட்டு மிதித்து விட்டு நடக்கும் இந்த மோசடி விளையாட்டு பற்றி மத்திய மாநில அரசுகளுக்கு தெரியும். தெரிந்தும் இந்த பண முதலைகளுக்கு தான் சப்போர்ட் செய்கிறது.
காரணம் இதில் உள்ள அந்த பணம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளின், அதிகாரத்தை ஆட்டி வைப்பவர்களின் பணம். அதனால் கண்டுகொள்ளவில்லை.
பல மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மைதானத்தில் போய் உட்கார்ந்து அங்கு ஆடும் எல்லாவிதமான ஆட்டத்தையும் கண்டு ரசித்து விட்டு வந்தார்கள். பலர் தொலைக்காட்சி பெட்டி முன் அலுவலகத்தில் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள். மக்கள்வரிப்பணத்தில் வாழும் இவர்கள் எவருக்குமே இந்த கேளிக்கை விளையாட்டிற்கு கேளிக்கை வரி விதிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை. காரணம் வரி விதித்தால் அது இவர்கள் தான் கட்ட வேண்டும் அதனால் வரி விதிக்கவில்லை.
சில அரசுகள், வரி விதித்தால் அரசு கஜானாவுக்கு போய்விடும். அதனால் அது வேண்டாம் எங்களை தனியே கவனித்து விடுங்கள் என தேர்தல் நிதி, கட்சிநிதி, தனிப்பட்ட நிதியாக வாங்கி விட்டார்கள். இதில் விதிவிலக்கு டெல்லி மாநில முதல்வர்.
டெல்லியில் நடந்த மேட்ச்களுக்கு வரி விதித்து வசூல் செய்து விட்டு தான் மறுவேலை செய்தார்.
இப்படி அதிகாரிகள், அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் கண்ணை திறந்து வைத்துக்கொண்டே தூங்குவது போல் மக்களை ஏமாற்றுபவர்கள் தற்போது ஊழல் நடைபெற்றுள்ளது விசாரிக்க வேண்டும், நாடாளமன்ற கூட்டு குழுவை அமைக்க வேண்டும் என கூச்சல் போட்டுக்கொண்டு ரகளை செய்வதை தொலைக்காட்சி பெட்டியில் காண்கிறோம்.
நாங்கள் நேர்மையானவர்கள் என காட்டிக்கொள்ள ஒரு அமைச்சரை பலி கொடுத்த காங்கிரஸ். ஐ.பி.எல் அமைப்பின் வருமானம் பற்றி அமலாக்கப்பரிவு, வருமானவரித்துறை போன்றவை விசாரித்து வருவதாக கூறுகிறது. இதுவும் ஒரு விளையாட்டு தான். மக்கள் மடையர்களாக இருந்துகொண்டு இதை காணும் வரை அவர்கள் நாயகர்கள்!