14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! டிரைவர் கைது!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி, கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை இவரது மகன் சின்ராஜ் (வயது- 20). இவர் பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

 

இவர் கடந்த வாரம் ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டி கிராமத்தில், விவசாய நிலங்களை சமன் செய்யும் பணியை செய்துள்ளார். அப்போது, சீலியம்பட்டி கிராமத்தை சேர்ந்த 14 வயதான கவுதமி, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தை பயன்படுத்தி நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்ற சின்ராஜ், வீட்டில் தனியாக இருந்த கவுதமியை கடத்திச் சென்று, பக்கத்தில் இருந்த பாக்குத்தோப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த இடத்தேலேயே மயங்கிக் கிடந்த சிறுமியை அவரது பெற்றோர்கள் மீட்டு ஆத்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போதுதான் சிறுமி கவுதமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கவுதமியின் பெற்றோர்கள் மல்லியக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தார். இதுகுறித்து விசாரனை நடந்து வருகிறது.

Leave a comment