நடிகர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகேயுள்ள வீரபாண்டி ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் பிரவீன் (24). இவர் திருமணமானவர். கடந்த 2011-ம் ஆண்டு 13 வழிப்பறி வழக்குகளில் சிறை தண்டனை பெற்றவர். பின்னர் 4 மாதத்தில் வெளியே வந்த இவர், மீண்டும் வழிப்பறி, திருட்டு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து பிரவீனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, துடியலூர் போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் பிரவீன் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
டிப்ளமோ படித்துள்ள பிரவீன், வேட்டிய மடிச்சுக்கட்டு, முதல் பயணம் மற்றும் பல படங்களில் துணைநடிகராக சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என தெரியவருகிறது.

Leave a comment