இலங்கை கிரிக்கெட் போட்டி நடுவருக்கு எதிர்ப்பு:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை நடுவரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடக்க உள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த குமார தர்மசேனா என்பவர் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். குமார தர்மசேனா நடுவராக நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை இந்தியாவை விட்டு வெளியேற்றக்கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று காலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டிருந்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கை அதிபர் ராஜபச்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ராஜபச்சேவின் உருவப்படத்தையும் தீ வைத்து எரித்தர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Leave a comment